சென்னை: டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சில கட்சிகள் மதத்தை வைத்து போராட்டங்களை தூண்டுகின்றன. போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது, அமைதியாக நடக்கலாம். நான் பாஜகவின் ஊதுகுழல், பாஜக என் பின்னால் உள்ளது என கூறுகிறார்கள். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் வரும் காலத்தில் மிக பெரிய பிரச்னை ஏற்படும். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெரும் என நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.