ஆவடி: ஆவடி அருகே வெள்ளானூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரி மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். ஆவடி அடுத்த வெள்ளானூரில் தனியார் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு செங்குன்றம், ஆசிரியர் காலனி, நாகாத்தம்மன் கோயில் தெருவை சார்ந்த சுதர்சன் (20) என்பவர் பி.சி.ஏ இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்து வலிப்பு நோய் இருந்துள்ளது. அதற்காக, அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இவர், கல்லூரிக்கு சக மாணவர்கள் உதவியுடன் சென்று வருவது வழக்கம்.இந்நிலையில் நேற்று காலை சுதர்சன், வீட்டிலிருந்து பேருந்து மூலம் கல்லூரிக்கு வந்தார். பின்னர், அவர் தனது வகுப்பு அறையான 2வது மாடிக்கு தனியாக படிக்கட்டில் ஏறிச்சென்றார். பின்னர், அங்கிருந்து கைப்பிடி சுவரை பிடித்தபடி நடந்து வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.