தண்டையார்பேட்டை: டெல்லி, கொல்கத்தா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வந்து அங்கிருந்து ராயபுரம், கடற்கரை ரயில் நிலையம் வழியாக எழும்பூர் ரயில் நிலையம் செல்கிறது. இதற்காக ரயில் பாதை ஒன்று மட்டும் இருப்பதால் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் மாறிமாறி நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக ரயில்வே நிர்வாகம் கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரயில்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடற்கரை ரயில் நிலையம் வழியாக செல்வதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.