சென்னை: இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக எதிருரை தாக்கல் செய்யப்படாததால் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பான்மையான வழக்குகள் நிலுவையாகவே இருந்து வருவது ஏற்புடையதல்ல.