தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சி பகுதிகளில் இருந்து தினமும் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்காத குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, இயற்கை உரம் தயாரிக்க தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கன்னடபாளையம், மண்ணுரான் குளம், அம்மன் நகர், சேலையூர் அம்பேத்கர் நகர், கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம், அருள் நகர், சேலையூர் சுடுகாடு ஆகிய பகுதிகளில் 7 நுண் உர செயலாக்க மையங்கள் மற்றும் 20 மிகச்சிறிய நுண் உர செயலாக்க மையங்கள் உள்ளன.