பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு வனப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க தீத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தபட்டுள்ளது. பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கடுமையான பனிப்பொழிவும் பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலும் காணப்படுவதால் வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதற்காக வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.