பேருந்து விபத்தில் உயிரிழந்த மெக்கானிக் மனைவிக்கு 38.89 லட்சம் இழப்பீடு': நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பேருந்து விபத்தில் உயிரிழந்த மெக்கானிக் மனைவிக்கு 38.89 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (27), மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2016ம் ஆண்டு வேலூரில் இருந்து, சித்தூருக்கு பேருந்துசில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத வகையில் டிரைவர் பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால், சித்தூர் பாலமனார் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து  சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி, கால்வாயில் கவிழ்ந்தது. இதில், சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர், உயிரிழந்தார்.

இந்தநிலையில், சங்கர் இறப்புக்கு இழப்பீடு கோரி அவரது மனைவி பிரியங்கா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.உமாமகேஷ்வரி முன்பு விசராணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் கணவர் இறப்பிற்கு பேருந்து டிரைவர்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் குடும்பத்திற்கு 38.89 லட்சம் இழப்பீடு வழங்க இப்கோ - டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: