சென்னை:அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை கட்டுபாட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் உள்ளது. திருவிழா காலங்கள் மட்டுமின்றி பூஜை நேரங்களில் மங்கள இசை இசைக்கப்படுவது வழக்கம். இதற்காக, நாதஸ்வரம், தவில், தாள இசைவாணர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊதியம் உயர்த்த கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதுநிலை திருக்கோயில்களில் பணிபுரியும் நாதஸ்வரம் பணியாளர் தவிர பிற இசை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியமான 2550க்கு பதிலாக 3200 மாற்றியமைக்கப்பட்டது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு
- சம்பள உயர்வு
- இசை கலைஞர்கள்
- கோயில்கள்
- தொழிலாளர் துறை கோயில்களில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கான மாநில சம்பள உயர்வு