சென்னை: குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்பிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் சமரசம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.