திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், சீரடிக்கு நேற்று சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் விஜயவாடா அஜித்சிங் நகரில் மெதுவாக சென்றபோது திடீரென இன்ஜினை விட்டு ரயில் பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் சுதாரித்துக்கொண்ட இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதற்கிடையே ரயில்பெட்டிகள் மட்டும் தனியாக செல்வதை அறிந்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக கீழே இறங்கினர்.