திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் தெருவை சேர்ந்த தனியார் வங்கி அலுவலர் நரேந்திரன் (28) என்பவரும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 14ம் தேதி இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், காதலி வேறு ஒருவருடன் செல்ேபானில் நீண்ட நேரம் பேசியதை நரேந்திரன் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காதலி, தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மண்டபம், அழைப்பிதழ் என அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்று போனதால் இதுபற்றி நரேந்திரன் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், இரு தரப்பினரிடம் விசாரித்து வந்தனர்.