மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 17 வயதான எனது மனநலம் பாதித்த, மாற்றுத்திறனாளி மகளை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்ததில் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கருவை கலைக்கவும், தேவையான சிகிச்சை அளிக்கவும், எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.