சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட வணிக வரித்துறையில் அதிகாரியாக இருந்தவர் எம்.கே.மனோகரன். இவர் கடந்த 1.1.2004 முதல் 15.9.2009 வரையிலான காலகட்டத்தில் பணியில் இருந்தபோது பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்.
மேலும், அந்த சொத்துகள் அவரது வருமானத்துக்கு அதிகமாக வாங்கியதாக புகார் எழுந்தது. அதன்படி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் அவர் 46 லட்சத்துக்கும் மேல் முறைகேடாக சொத்து சேர்த்ததை உறுதி செய்தனர். இதனைதொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு நடந்து வந்தது.