வழக்கு எண்ணிக்கை பொறுத்து தாலுகாக்களில் நீதிமன்றங்கள்

திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி(திமுக): திருவெறும்பூர் தாலுகா நீதிமன்றம் அமைக்க அரசு முன் வர வேண்டும்.  அமைச்சர் சிவி சண்முகம்: புதிதாக பல்வேறு தாலுகாக்களில் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றங்கள் இல்லாத தாலுகாக்களை கணக்கெடுத்து நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து அந்த தாலுகாக்களில் நீதிமன்றங்களை கட்டவேண்டும் என்பது அதிமுக அரசின் கொள்கை முடிவாக உள்ளது.  அதன்படி 60 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மதுரவாயல், பல்லாவரம் தாலுகாக்களில் நீதிமன்றங்கள் திறக்கப்படும். நீதிமன்றம் இல்லாத திருவெறும்பூர் தாலுகாவில் வழக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதன் அடிப்படையில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: