சென்னை: போதைப்பொருள் கடத்திய தென்னாப்ரிக்கா பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு 20.1.2017 அன்று பிரேசில் நாட்டில் இருந்து அபுதாபி வழியாக சென்னைக்கு பெண் ஒருவர் கொகைன் போதைப்பொருளை கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி, பெண் அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.21.1.2017 அன்று அதிகாலை விமானம் சென்னை விமானநிலையத்துக்கு வந்தது. அப்போது, அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் உள்ளே சென்று, சோதனை மேற்கொண்டனர். அதில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அந்த பெண் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் நட்டோம்பிபுத்தி மிசோமி என்பது தெரியவந்தது. பின்னர், அவரிடம் போதைப்பொருள் தொடர்பாக சோதனை நடத்தினர்.