சென்னை: சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.இந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது.மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கோரி 5 ஆண்டு சிறை சிறை தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், எலக்ட்ரீசியனாக பணியாற்றிய தன்னை, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பிளம்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.