இந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்துக்கு 22% அதிக நிதி ஒதுக்கியதற்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்துக்கு 22% அதிக நிதி ஒதுக்கியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்கு புறக்கணிக்கிறது என்பதை உணர முடிவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு தலைவராக இருக்கும் தமிழக முதல்வர் தமிழை வளர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: