சென்னை: மூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப்பேழை புத்தகம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” என்ற மூன்றாண்டு சாதனை மலர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், சட்டப் பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள் இடம்பெற்ற புத்தகத்தை தமிழக முதல்வர் நேற்று வெளியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.