சென்னை: போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு தொடர்ந்தார். போலீசில் கொடுத்த புகாரை திரும்பப் பெறுவதாக இயக்குனர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வேண்டுமென்றால் விசாரிக்க வேண்டும், இல்லையென்றால் விசாரிக்கக்கூடாது என்று கண்டித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.