சத்தியமங்கலம்: சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்று வாகனங்களை துரத்தும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக இருமாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.
சத்தி - மைசூர் நெடுஞ்சாலையில் வாகனங்களை துரத்தும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் பீதி
- மோட்டாரிஸ்டுகள்
- நெடுஞ்சாலை
- Sathi-மைசூர்
- ஒற்றை யானை துரத்தும் வாகனங்கள்: வாகன ஓட்டிகள் பீதி
- சத்தி-மைசூர் நெடுஞ்சாலை