சென்னை: பவர் கிரிட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக (பணியாளர்கள்) வினோத் குமார் சிங் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு மனித வள மேம்பாட்டு துறை பொது மேலாளராக பொறுப்பு வகித்தவர். வடகிழக்கு மாநிலங்களில் கொள்கை சீரமைப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் சிறப்பாக கையாண்டவர். அதோடு பவர் கிரிட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தில்தான் பவர் கிரிட் நிறுவனத்துக்கு மகாரத்னா அந்தஸ்து கிடைத்தது.