சென்னை: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் வரும் 19ம் தேதி நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தொழிற்பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம் வருகிற 19ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழிற் நிறுவனங்களும் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பப்பட்ட உள்ளன.
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நேரடி சேர்க்கை முகாம்
- சேர்க்கை முகாம்
- பயிற்சி
- செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி மையம்
- நேரடி சேர்க்கை முகாமிற்கான தொழிற்பயிற்சியில் செங்கல்பட்டு தொழிற்பயிற்சி மையம்