சென்னை: தமிழகத்தில் கடந்த 19 ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரங்களை அளித்து விளக்கமளித்துள்ளனர். இந்த குற்றங்கள் அனைத்தும் மாநில தகவல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முருகேசன் என்பவர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் அதன் ஆணையர் முத்துராஜ் முன்னிலையில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும், தனியார் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.