திருமலை: ஆந்திர மாநில நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து அரசு நிர்வாகம் செயல்படும் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் உள்ள பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளது. தலைநகராக அறிவிக்கப்பட்ட பிறகு நாள்தோறும் அரசு பணிகளுக்காக வந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும். எனவே, பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துவதற்காக தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து வர காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே பஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.