சென்னை: நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்பட உள்ளதாக, சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த கன்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் பழுப்பு நிற டேப் சுற்றப்பட்ட 310 பாக்கெட்களில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. வண்டியின் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திர பதிவு எண் கொண்ட வண்டிக்கு, தமிழக பதிவு எண்ணை ஒட்டி, பயன்படுத்தியது தெரிந்தது.