தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பிரதான சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி, கோயில், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் டவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. செல்போன் டவர் அமைத்தால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு பொதுமக்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் என்பதால், இங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.