சென்னை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் தங்கம், வைரம், வெள்ளி, பட்டு, ஜவுளி ரெடிமேட், பர்னிச்சர், மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடும் வகையில் புரசைவாக்கத்தில் புதிதாக பிரமிப்பூட்டும் வகையில் புதிய சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.ராஜரத்தினம் கூறுகையில், ‘‘30,000 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜுவல்லரி தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் மணவிழா, நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பு, பூப்புனித நீராட்டு உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு தேவையான பட்டு சேலைகள் மற்றும் பட்டாடைகள் தனித்தனியாக அழகிய வடிவமைப்புடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.