சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல் நலத்தை பேணுதல் தொடர்பாக ஒருநாள் கருத்தரங்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த நிகழ்வில், உடல் நலம் தொடர்பான குறுந்தகடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு பேசியதாவது: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை என்பது ஏப்ரல் மாதத்தில்தான் நடத்த வேண்டும்.