திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதல் எம்எல்ஏ தப்பினார்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் திண்டிவனம் செல்வதற்காக பாக்குளத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். ஆவணிப்பூர் கிராமத்தை சேர்ந்த காளி (27) என்பவர் காரை ஓட்டிச் சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரத்திலேயே எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தில் ேமாதி விபத்துக்குள்ளானது. இதில் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த எம்எல்ஏ காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: