சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற தொழில் திட்டங்களை எதிர்ப்பதை எவரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எந்தத் தொழில் மக்களை பாதிக்காது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். காவிரி டெல்டாவைப் பொறுத்தவரை விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட தொழில்களை ஊக்கப்படுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாய தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?