சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்திலுள்ள சின்ன ஓவுலாபுரம், ஊத்துப்பட்டி, கன்னிசேர்வைபட்டி, முத்துகிருஷ்ணாபுரம், அப்பிபட்டி, எரசக்கநாயக்கனூர், வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் புடலங்காய் பயிரிடப்பட்டுள்ளது.