சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். இதுகுறித்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரை சந்தித்து தமிழர்கள் 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தோம். பிரதமரை சந்திக்கும்போது வலியுறுத்துவதாக முதல்வர் கூறினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து உங்கள் கருத்து...? நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்குவது யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு படத்துக்கு ஜிஎஸ்டியோடு 126 கோடி வாங்குகிறார்.