தண்டையார்பேட்டை: பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததை கண்டித்து தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை ராயபுரம் சூர்யநாராயணசெட்டி தெருவில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பள்ளி எதிரே பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கும்படியும் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்ைல என கூறப்படுகிறது.