தரங்கம்பாடி: தரங்கம்பாடி பகுதிக்கு சுற்றுலா வந்த டென்மார் மாணவர்கள், கடற்கரையை சுத்தம் செய்தனர். டென்மார்க் நாட்டில் உள்ள வெஸ்ட் பைன் எப்டர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிகில்ட் மற்றும் 7 ஆசிரியர்கள், 35 மாணவ, மாணவிகள் டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச்சங்கத்தின் தலைவர் பவுல்பீட்டரசன் தலைமையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வந்துள்ளனர். அவர்கள் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வெள்ளையடித்தனர். தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிகள், கோயில்களுக்கு சென்று தமிழர் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை அறிந்து கொண்டனர்.