திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் எப்போது நடத்தப்படும்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் தனி அதிகாரியின் பதவிக்காலம் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைவதால் புதிய அதிகாரியை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: