கோபி: தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்தால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கோபியில் நடைபெற்றது. பின்னர் மாநிலத்தலைவர் சண்முகம் கூறியதாவது: மத்திய அரசு உதய் மின் திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மின்கட்டணம் என்ற திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.