8,888 காவலர் பணியிடங்களுக்கான தேர்வானவர்கள் இணையதளத்தில் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளிலுள்ள 8,888 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இறுதியாக  மொத்தம் 8,773 விண்ணப்பதாரர்களில் 2,432 பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முழுமையான இனச்சுழற்சி விவரங்களுடன் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் இணையதளம் www.tnusrbonline.org ல் ேநற்று வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: