சென்னை: இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிப்பிரியா சென்னை மாவட்ட உதவி ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், காளிகாம்பாள் கோயிலின் அறங்காவலர் குழு தேர்தல் நடத்துவது குறித்து 1.4.2019 முதல் 31.12.2019 வரை காலத்திற்கான உறுப்பினர் சேர்க்கை பதிவுகளை சரிபார்த்தல் பணிக்கு கச்சாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் பாஸ்கரன், முண்டகக்கண்ணி அம்மன் கோயில் செயல் அலுவலர் லட்சுமி காந்த பாரதிதாசன், கங்காதேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் செந்தூர்பாண்டியன், மருந்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் அருட்செல்வன், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் அலுவலர் நாராயணன் உட்பட 43 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள், பதிவு செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை சரிபார்த்து உதவி ஆணையருக்கு தெரிவிக்க வேண்டும்.
காளிகாம்பாள் கோயிலில் அறங்காவலர் குழு தேர்தல் 43 சிறப்பு பணியாளர் நியமனம்: அறநிலையத்துறை நடவடிக்கை
- தேர்தல்
- அறங்காவலர் குழு
- காளிகம்பல் கோயில் 43 சிறப்பு பணியாளர்கள் நியமனம்
- அறங்காவலர்கள்
- காளிகம்பல் கோயில்