சென்னை: இந்தியாவில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் பயப்படுகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சென்னை, திநகரில் உள்ள தனியார் ஓட்டலில் தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். இதையடுத்து கருத்தரங்களில் அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பயப்படுகின்றனர். அரசின் பொருளாதார கொள்கை குறித்து தொழில் கூட்டமைப்பு பேச வேண்டும். எல்ஐசி பங்கு தனியாருக்கு விற்பனை செய்வது எனக்கு உடன்பாடு உள்ளது.