தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 5ம் தேதி காலை நடக்கிறது. கடந்த 27ம் தேதி காலை பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. அதைதொடர்ந்து சாந்தி பூஜை, வடுக யந்திர பூஜை என ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இதற்காக நேற்றுமுன்தினம் காலை தஞ்சை வெண்ணாற்றங்கரையில் இருந்து கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டது. அந்த நீர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து யாக சாலையில் வைக்கப்பட்டது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதற்காக 11,900 சதுர அடி பரப்பில் 110 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது.