சரஸ்வதி சிந்து என மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் தவறில்லை: மாஃபா பாண்டியராஜன்

சென்னை: பட்ஜெட் தாக்கலின் போது சரஸ்வதி சிந்து என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் தவறில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூர் உட்பட இந்தியா முழுவதும் ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதைக் குறிப்பிடுவதற்கு முன்பு நிர்மலா சீதாராமன், சிந்துசமவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று குறிப்பிட்டார். அதற்கு அவையிலேயே தமிழக எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories: