சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அறிவுசார் சொத்து மேல்முறையீடு வாரியத்தை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டாம் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. அறிவுசார் சொத்து மேல்முறையீடு வாரியம் கடந்த 2003 முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் சொத்துரிமை தொடர்பான ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் மேல் முறையீடு மற்றும் திருத்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்தது. சமீப காலமாக இந்த வாரியத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில், மேல் முறையீட்டு வாரியத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்கு பல்வேறு வக்கீல் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த வாரியத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னையில் செயல்படும் அறிவுசார் சொத்து மேல்முறையீடு வாரியத்தை மாற்ற வேண்டாம்: மத்திய அரசுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் கோரிக்கை
- சென்னை
- தமிழ்நாடு பூங்காக்கள் தமிழ்நாடு பூங்கா சபை
- அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம்
- அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம்
- சென்டர்