கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். வரும் 7 ஆம் தேதி இந்தியா வரும் ராஜபக்சே, 8 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். 11 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை பிரதமர் ராஜபக்சே, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.