சென்னை: 83 கோடியே 83 லட்சத்தில் 240 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை - மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 25 பேருந்துகளும் என பல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மொத்தம் ரூபாய் 83 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.