சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம்-மகாபலிபுரம், சென்னை மாவட்டம் - மேடவாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் 15 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் மற்றும் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை மீட்புப் பணிகள் நிலையம் என மொத்தம் 17 கோடியே 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.