வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் எருது விடும் விழாவிற்கு அனுமதி தராததால் பொதுமக்கள் துணையாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலாப்பூர் பேட்டை அருகே புத்தாண்டு குப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவையொட்டி எருது விடும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஊர் பகுதியில் காளைகளை ஓடவிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓடும் காளைகளுக்கு லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தற்போது, புத்தாண்டு குப்பம் கிராமத்தில் எருதுவிடும் நிகழ்ச்சியானது வரும் 31ம் தேதி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் அனுமதி பெற்றுதான் இந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டனர். மேலும் பார்வையாளருக்கான இன்சூரன்ஸ், காளைகளுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.