சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 143 துறைதேர்வுகளை கடந்த 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னை மற்றும் டெல்லியில் உள்ள 33 தேர்வு மையங்களில் நடத்தியது. இந்த துறைதேர்வுகளின் வினாத்தாள்கள், கொள்குறி வகையை சார்ந்த தேர்வுகளின் வினாத்தாட்களுடன் கூடிய உத்தேச விடைகள் மற்றும் விரிந்துரைக்கும் வகை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.