சென்னை: சென்னை அம்பத்தூரில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் கடந்த 5 ஆண்டுகாலமாக அயல்நாட்டில் வேலை வாங்கி தரும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர், வேலை வாங்கி தருவதாக கூறி பல இளையஞர்களை ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திலீப்குமாரால் ஏமாற்றப்பட்ட 5 மர்ம நபர்கள் இன்று காலை பட்டப்பகலிலேயே அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பேசுவது போன்று பாவனை செய்து, பின்னர் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.