சென்னை: இந்தியாவில் திறமையாளர்களுக்கு முகவரி கிடையாது என நீதியரசர் கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வார இதழ் ஒன்றின் தொடக்க விழாவில் நீதியரசர் கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், நவீன இயந்திரங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றி விட்டனர் என அவர் வேதனை தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், சிவாரிசு மூலம் முன்னேறிவிடலாம் என்ற இழிநிலை இந்தியாவில் பரவிருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.