சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டலத்தில் கடந்த 1984ல் கண்டக்டராக சேர்ந்தவர் சேகர். பஸ்சில் வசூலிக்கும் டிக்கெட் கட்டணத்தை காலதாமதமாக தந்ததாக இவரை கடந்த 2001ல் பணி நீக்கம் செய்து திருவண்ணாமலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சேகர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வேலூர் முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் சேகரை பணி நீக்கம் செய்தது செல்லாது என்று அறிவித்து அவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறு 2015ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து போக்குவரத்து கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு அளித்த உத்தரவு வருமாறு: போக்குவரத்து கழகத்தின் உத்தரவை ரத்து செய்ததற்கான காரணத்தை தொழிலாளர் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. தொழிலாளர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் தரப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.